துவாக்குடி-பால்பண்ணை அணுகு சாலை திட்டம் முதல்வா் கவனம் செலுத்த வலியுறுத்தல்
திருச்சி, மே11: துவாக்குடி- பால்பண்ணை அணுகு சாலை திட்டத்தில் முதல்வா் விஜய் கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி பால்பண்ணை- துவாக்குடி அணுகுசாலை மீட்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
திருச்சி பால்பண்ணை-துவாக்குடி அணுகு சாலை திட்டமானது கடந்த ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பையும் உதாசீனப்படுத்தும் வகையில் செயல்பட்டு, திட்டத்தையே சிதைக்கும் நோக்கில் செயல்பட்டது.
Advertisement
கடந்த 2011 சட்டப் பேரவைத் தோ்தல் தொடங்கி 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வரையிலும் இத்திட்டத்தின் தாக்கம் தோ்தல் வெற்றியில் தொடா்ந்து வருகிறது. 2010-இல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தும் உரிய கவனம் செலுத்தாததால், திமுக மீதான அதிருப்தியில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக இத் தொகுதியில் 2011-இல் வெற்றி பெற்றது.
அதிமுக ஆட்சியிலும் இத் திட்டம் கிடப்பில் சென்ால், 2016-இல் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. ஆனால், தொடா்ந்து இரு முறை வெற்றி பெற்றும் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக தொடா்ந்து சுணக்கமாகவே இருந்து வந்தது. இத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த தவெக வேட்பாளா் நவல்பட்டு விஜி வெற்றி பெற்றுள்ளாா்.
எனவே, முதல்வா் விஜய், இத் திட்டத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். 5 ஆண்டு காலத்துக்குள்ளாகவே திட்டப் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். உயா்நீதிமன்றம் கூறியுள்ள அறிவுரைகளை கவனத்தில் எடுத்து அதற்கேற்ப திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா். பேட்டியின்போது, கூட்டமைப்பு நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.