முகப்பு
திருச்சி

பொன்மலையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 31 மே 2026, 4:14 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

திருச்சி பொன்மலையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி மகன் மணிகண்டன் (20). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த 2 நாள்களாக வீட்டுக்கு வராமல் வெளியில் சுற்றியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்த அவரை தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், வீட்டினருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.