வாரணவாசியில் முன்னாள் ராணுவ வீரர் நினைவு தினம்
அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாலுவின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாலுவின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பணியின்போது
உயிரிழந்தார். இவரின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், பாலுவின் உருவப்படத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியத் தலைவர் மூர்த்தி, செயலர் நடராஜன், பொருளாளர் பத்மநாபன்,நிர்வாகி ஜெயராமன் உள்பட பலர் தூவி,வீரவணக்கம் செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.