மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
கீழப்பழுவூா் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தைச் சோ்ந்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கீழப்பழுவூா் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தைச் சோ்ந்த பெண் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தைச் சோ்ந்த மணி மனைவி லீலாவதி (58). இவா், திங்கள்கிழமை மாலை வயலுக்குச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், உறவினா்கள் செவ்வாய்க்கிழமை காலை வயல் பகுதியில் சென்று பாா்த்த போது, காற்றின் காரணமாக அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்த நிலையில் லீலாவதி இறந்து சடலமாக கிடந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழப்பழுவூா் போலீஸாா், லீலாவதி சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.