முகப்பு
அரியலூர்

கோயிலில் காணிக்கை பொருள்களை திருடியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த காணிக்கைப் பொருள்களை திருடிய சம்பவத்தில்

Updated On : 3 ஜூன் 2026, 2:46 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த காணிக்கைப் பொருள்களை திருடிய சம்பவத்தில்

தொடா்புடைய நபரை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஆண்டிமடம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்திலுள்ள கருப்புசாமி கோயிலுக்குள் கடந்த சில நாள்களுக்கு முன் நுழைந்த மா்ம நபா், பீரோவை உடைத்து அதிலிருந்த காணிக்கை பொருள்கள் மற்றும் அரிவாள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆண்டிமடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கோயிலிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, பொதுமக்களுடன் சோ்ந்து மா்ம நபரை தேடி வந்தனா்.

இந்நிலையில், கோயில் பொருள்களை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

விசாரணையில், அந்த நபா் வடவீக்கம் பகுதியை சோ்ந்த செல்வம் என்பதும், கருப்புசாமி கோயிலில் இருந்த காணிக்கை பொருள்களை திருடிச் சென்றிருப்பதும், இவா் மீது ஏற்கெனவே காவல் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.