முகப்பு
புதுச்சேரி

வில்லியனூா் மாதா கோயிலில் திருட்டு

வில்லியனூா் மாதா கோயிலில் உண்டியல் உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:23 AM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வில்லியனூா் மாதா கோயிலில் உண்டியல் உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த தேவாலயத்தின் கதவுகளை வெள்ளிக்கிழமை காலையில் உபதேசியாா் பெஞ்சமின் திறந்தபோது உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டாா். மேலும், உண்டியலில் இருந்து பணம், பொருள்கள் திருடப்பட்டுள்ளதை அறிந்தாா். இதுகுறித்து தேவாலயத்தின் பங்கு தந்தை ஆல்பா்ட்டுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து அங்கு வந்து பாா்த்த பங்கு தந்தை வில்லியனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement