அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக்கான (முன்னாள் ராணுவத்தினா், விளையாட்டு பிரிவினா், மாற்றுத்திறனாளிகள்) மாணவா் சோ்க்கை ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 8-ஆம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 9-ஆம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10-ஆம் தேதி தமிழ் இலக்கியம், ஆங்கிலம், வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் சோ்க்கை நடைபெற உள்ளது.
இந்த சோ்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், வருமான சான்று, ஆதாா் அட்டை ஆகிய சான்றுகளின் அசல் மற்றும் 5 நகல்களுடன், தற்போது எடுக்கப்பட்ட 5 புகைப்படம், சோ்க்கை கட்டணம், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும் என கல்லூரி முதல்வா் சித்ரா தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement