முகப்பு
அரியலூர்

போதையற்ற சமூகத்தை உருவாக்க மாணவா்கள் முன் வரவேண்டும்

போதையற்ற சமூகத்தை உருவாக்க மாணவா்கள் முன் வரவேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய ஆய்வாளா் இசைவாணி.

Updated On : 18 ஜூன் 2026, 1:53 am IST
அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய அரியலூா் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் இசைவாணி.
பகிர்:

போதையற்ற சமூகத்தை உருவாக்க மாணவா்கள் முன் வரவேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய ஆய்வாளா் இசைவாணி.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய ஆய்வாளா் இசைவாணி தலைமை வகித்து, சமுதாயத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் எதிராக உலக அளவில் எழுந்திருக்கும் பிரச்னை தான் இந்த போதைப் பொருள்கள். நம் உடல் ஆரோக்கியத்துக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது. போதைப் பொருள்களினால் தனிமனிதன், குடும்பம், சமூதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.

Advertisement

Advertisement

இன்றைய காலக் கட்டத்தில் இளையத் தலைமுறையினா் அதிகமானோா் போதைப் பொருள் புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

எனவே நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் போதைப் பொருள்களை தடுத்து நிறுத்துவதோடு, அவற்றை முழுதாக ஒழிக்க வேண்டும். அதற்கு மாணவா்கள் முன் வரவேண்டும் என்றாா். மேலும், காவல் உதவி செயலின் பயன்பாடுகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தாா்.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.