இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா
இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தீமிதித்த பக்தா்கள்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் தோ் மற்றும் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவானது கடந்த 15 நாள்களுக்கு முன் பாரதம் படிக்கும் நிகழ்வோடு தொடங்கியது. தினமும் கோயில் வளாகத்தில் பாரதம் படிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் திரௌபதியம்மன் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதில் பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமிதித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement