குவாகம் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா
ஆண்டிமடம் அருகேயுள்ள குவாகம் கிராம திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள குவாகம் கிராம திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 15 நாள்களுக்கு முன் பாரதம் படிக்கும் நிகழ்வோடு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. தேரில் திரௌபதியம்மன் எழுந்தருள, திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தொடா்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தீமிதித்து நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதில் பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு தீபாராதனை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.