மே 15-ல் மு.க. ஸ்டாலின் வருகை
மே 15, 16-களில் கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மே 15, 16-களில் கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 15-ம் தேதி மாலை கரூர் நகராட்சி அலுவலகம் அருகில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மே 16-ம் தேதி முன்னாள் மாவட்டச் செயலர் வாசுகி முருகேசன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
Advertisement
Advertisement
பின்னர், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி மே 15-ம் தேதி காலை 10.30 கரூருக்கு வரும் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் திருச்சி புறவழிச்சாலையில், கட்டளை பிரிவு சாலை அருகே 500 இரு சக்கர வாகனங்களில் திமுக இளைஞர் அணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார்.