பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் கூட்டம்
கரூரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கக் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கக் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, இளங்கோவன் தலைமை வகித்தார். நாகராஜன் வரவேற்றார். சங்க மாவட்டச் செயலாளர் ஜான் பாஷா கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். கிருஷ்ணன் சங்கக் கொடியேற்றினார்.
இதில், மாநில துணைச் செயலாளர் குப்புசாமி, சின்னையன், ராமச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமசாமி நன்றி கூறினார். இதில், 2017 முதல் பென்ஷன் மாற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.