கரூரில் பெரியார் தொழிற்சங்க பேரவை கிளை தொடக்கம்
கரூர் திருமாநிலையூர் பணிமனையில் அரசுப் போக்குவரத்துக்கழக தந்தை பெரியார் தொழிற்சங்கப்
கரூர் திருமாநிலையூர் பணிமனையில் அரசுப் போக்குவரத்துக்கழக தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவை கிளை மற்றும் பேரவை பலகைத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஈரோடு மண்டல செயலர் ம.குமரவேல் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலர் சி.குப்புசாமி முன்னிலை வகித்தார்.
புதிய கிளையை கரூர் மாவட்ட தந்தை பெரியார் திக தலைவர் தனபால் தொடக்கி வைத்துப் பேசினார். தி.க மாவட்டத்தலைவர் குமாரசாமி, கிளை நிர்வாகிகள் ராஜ்குமார், வினோத்ராஜா, நந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.