மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர் சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர் சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் கேடயம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா தாந்தோணிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தலைவர் எஸ். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயல் தலைவர் ஆர். தேவராஜ் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் எஸ். பாலாஜி, துணைத் தலைவர் பி. முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில அவைத் தலைவர் ஊத்துக்குளி பிஎஸ். மணி, மாநில பொதுச் செயலர் முன்னாள் நீதிபதி வி. தங்கராஜ், மாநில கௌரவ ஆலோசகர் க. ராமகிருஷ்ணன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயம் வழங்கிப் பேசினர்.
மாநில பொருளாளர் ஏ. ரத்தினபாண்டியன், துணைச் செயலர் ஆர். செல்லகாமு, அகத்தியா நினைவு அறக்கட்டளைத் தலைவர் கோ. கலையரசன், அஜீத் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.