ஆடுகளைத் திருட முயன்ற 3 பேர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை திருட முயன்ற 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை திருட முயன்ற 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கடவூர் அடுத்த தந்துவார்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவர், அதே பகுதியில் தனது தோட்டத்தில் ஆட்டுக்கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். சனிக்கிழமை இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆடுகளைத் திருட முயன்றனர்.
அப்போது ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த காளியப்பன் ஆடுகளைத் திருட முயன்ற மர்மநபர்களைப் பார்த்து "திருடன், திருடன்' என சப்தமிட்டார். இதனால் அப்பகுதியினர் ஓடி வந்து திருடர்களைப் பிடித்து பாலவிடுதி போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், கடவூர் அடுத்த துளிப்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி(65), பசுபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் எனத் தெரியவந்தது. போலீஸார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.