வடக்குப்பாளையத்தில் முதியோர் தின விழா
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் சமூக நலத்துறை சார்பில் முதியோர் தின விழா மற்றும்
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் சமூக நலத்துறை சார்பில் முதியோர் தின விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வடக்குப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நேத்ரா அறக்கட்டளை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதியுமான ஆர். தங்கவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் கேகே. சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்தினர். இதில் சார்பு நீதிபதி ஆர். தங்கவேல் பேசுகையில், இங்கு இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோருக்கு சட்டம் சார்ந்த பிரச்னைகள் களையப்படும், முதியோர் உதவித்தொகை, ஆதார் அட்டை பெறுவதற்கு மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அறக்கட்டளை பணியாளர் தீபா வரவேற்றார்.