முகப்பு
கரூர்

வேலாயுதம்பாளையத்தில் இன்று அமமுகவினர் உண்ணாவிரதம்

வேலாயுதம்பாளையத்தில் திங்கள்கிழமை (அக்.8) அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

Updated On : 8 அக்டோபர் 2018, 8:38 am IST
பகிர்:

வேலாயுதம்பாளையத்தில் திங்கள்கிழமை (அக்.8) அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில அமைப்புச்செயலரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி விடுத்துள்ள அறிக்கை:
அரவக்குறிச்சி பேரவைத் தொகுதி தேர்தலில் வாக்குச் சேகரிக்கச் சென்றபோது பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை அரவக்குறிச்சி எம்எல்ஏ  என்ற முறையில் பேரவையில் முன்வைத்து நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை  தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து திங்கள்கிழமை வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே அமமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் பேசுகிறார். இதில் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.