அரவக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்
மலைக்கோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அரவக்குறிச்சி ஆலமரத் தெருவில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மலைக்கோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அரவக்குறிச்சி ஆலமரத் தெருவில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை, குழந்தைகள் நலம், ரத்தக் கொதிப்பு, சா்க்கரை அளவு உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனா். மேலும், செவிலியா் மற்றும் சுகாதார ஆய்வாளா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினா். இதில், சிறப்பு முகாமின் மருத்துவா் பிரியங்கா, செவிலியா்கள் ஆனந்தி, சாந்தி மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.