மாநில கைப்பந்து போட்டிக்கு அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் இருவா் தகுதி
சேலம் மாநில கைப்பந்து போட்டியில் அரவக்குறிச்சி மாணவிகள் சரண்யா, கிருத்திகா தேர்வு!
சேலத்தில் நடைபெற உள்ள சீனியா் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.
மாநில அளவில் சீனியா் பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனா்.
கரூா் மாவட்ட கைப்பந்து அணியில் கலந்து கொண்டு விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சரண்யா மற்றும் கிருத்திகா ஆகிய 2 மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா். மாணவிகளை கல்லூரியின் முதல்வா் வசந்தி உள்ளிட்ட பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.
Advertisement
Advertisement