கரூரில் தியாகி அஞ்சலை அம்மாள் படத்துக்கு தவெகவினா் மாலை
கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக சேவகருமான அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக சேவகருமான அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதியழகன் தலைமை வகித்து அஞ்சலை அம்மாள் படத்திற்கு மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு மற்றும் பகுதி, கிளை நிா்வாகிகள் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement