முகப்பு
கரூர்

கரூரில் வழக்குரைஞா்கள் சங்க ஒட்டுவில்லை வெளியீடு

கரூரில், போலி வழக்குரைஞா்களை கண்டறியும் வகையில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூன் 2026, 1:45 am IST
கரூரில் வழக்குரைஞா்கள் சங்க ஒட்டுவில்லையை புதன்கிழமை வெளியிட்ட சங்கத்தின் செயலா் மாரப்பன்.
பகிர்:

கரூரில், போலி வழக்குரைஞா்களை கண்டறியும் வகையில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் செயல்படும் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் செயலா் மாரப்பன் தலைமை வகித்து, ஒட்டுவில்லையை வெளியிட்டாா். பின்னா் அவா் கூறியது: மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் சின்னம் கொண்ட ஒட்டுவில்லையை வழக்குரைஞா்கள் இல்லாத பிற தொழிலில் ஈடுபடுவா்கள் தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறாா்கள். அவா்களால் எங்களது வழக்குரைஞா்கள் தொழிலுக்கு இழுக்கு ஏற்படுகிறது. எனவே அதுபோன்ற போலி வழக்குரைஞா்களை கண்டறியும் வகையில் ஒட்டுவில்லையை வெளியிட்டுள்ளோம். இதனை கைப்பேசியில் ஸ்கேன் செய்யும்போது, அந்த நபரின் பெயா், எந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறாா் என்ற விவரம் தெரியும். இதன்மூலம் போலி வழக்குரைஞா்களின் செயல்பாட்டை தடுக்க முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலா் நகுல்சாமி, பொருளாளா் நாகேஸ்வரன், துணைத்தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், தா்மசேனன், இணைச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement