முகப்பு
கரூர்

ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து

கரூா் அருகே ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

Updated On : 25 ஜூன் 2026, 3:43 am IST
தீ விபத்தில் எரிந்து சேதமான தையல் இயந்திரங்கள்.
பகிர்:

கரூா் அருகே ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

கரூா் மாவட்டம், தான்தோன்றிமலை வாஞ்சிநாதன் பகுதியில் தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தையல் பிரிவு தனியாக ஒரு கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு புதன்கிழமை காலை பணியில் யாரும் இல்லாத நிலையில், தையல் இயந்திரங்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்தது. மேலும், கரும்புகை மூட்டமும் சூழ்ந்து வெளியேறியதால், அதனைக் கண்ட அருகே உள்ள குடியிருப்பு மக்கள் உடனடியாக கரூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அதன்படி அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தையல் இயந்திரங்கள், ஜவுளி பொருள்கள், நூல் கண்டுகள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கரூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments