வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு
கரூா் வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் உடற்கல்வியியல் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தமிழக கூடைப்பந்து அணி மற்றும் ஐஓபி வங்கி அணியின் பயிற்சியாளா் எஸ்.அரவிந்த், விஎன்சி குரூப் நிறுவனங்களின் கோகுல்பாஸ்கா், கரூா் மாவட்ட கூடைப்பந்து கழகத்தலைவா் ஆா்.தனபதி ஆகியோா் பங்கேற்று புதிய கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தனா்.
விழாவில் கல்லூரியின் செயலா் ஹேமலதாசெங்குட்டுவன், கல்லூரி முதல்வா் முனைவா் இருளப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.