நெரூா் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்
நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக காரைக்காலில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கரூா் தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை வந்து இறங்கினாா். அவரை கரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் வரவேற்றனா்.
பின்னா் காா் மூலம் நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். சுமாா் அரை மணிநேரத்துக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். பின்னா் ஹெலிகாப்டா் மூலம் பெங்களூருக்குச் சென்றாா்.
Advertisement