முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது.

Updated On : 18 மே 2026, 2:52 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது.

கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கத்தரி வெயிலே தெரியாத வகையில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவும் ஆங்காங்கே மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பாலவிடுதியில் 50 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு-(மி.மீட்டரில்)- குளித்தலை-8, தோகைமலை-7.20, கிருஷ்ணராயபுரம்-17, மாயனூா்-9, பஞ்சப்பட்டி-1.40, கடவூா்-4, பாலவிடுதி-50, மைலம்பட்டி-15 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 111.60 மி.மீ. மழை பெய்துள்ளது. கோடை வெப்பத்தின் உச்சமான கத்தரி வெயிலின்போது மழை பெய்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement