குடும்பத் தகராறில் இளைஞர் தற்கொலை
பெரம்பலூரில், குடும்பத் தகராறில் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூரில், குடும்பத் தகராறில் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் செல்லையா (32). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட செல்வராணிக்கு குழந்தை இல்லாததால், அஞ்சலையை திருமணம் செய்துகொண்டாராம். இதனால், ஜீவனாம்சம் வழங்கக் கோரி, பெரம்பலூர் நீதிமன்றத்தில் செல்வராணி வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு சென்று வந்த செல்லையா மதனகோபாலபுரம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement
Advertisement