அரியலூரில் ரயில் மறியல் முயற்சி: இ.கம்யூ. கட்சியினர் 41 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 41 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 41 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உச்ச நீதிமன்றம் அளித்த 6 வாரக் கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி புதன்கிழமை அரியலூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 41 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, அரியலூர் அண்ணா சிலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு பேரணியாகச் சென்ற அவர்களை, கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தடுத்து நிறுத்தி, அரியலூர் போலீஸார் கைது செய்தனர். போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் தண்டபாணி, திருமானூர் ஒன்றியச் செயலாளர் ஆறுமகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.