பயறுவகை சாகுபடி செயல்விளக்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில், பயறுவகை சாகுபடி குறிப்புகளுக்கான வயல்வெளி விளக்கம் அண்மையில் நடைபெற்றது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில், பயறுவகை சாகுபடி குறிப்புகளுக்கான வயல்வெளி விளக்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ். கீதா, பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் பயிர் சாகுபடிக்கு மேம்படுத்தப்பட்ட பயிர் ரகங்களின் முக்கியத்துவம், மரபியல் மற்றும் பயிர் இனப்பெருக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ப. ராமகிருஷ்ணன், வேளாண் பல்கலை. மூலம் வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் தரக்கூடிய பயறு வகைகளின் முக்கிய பண்புகள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் உதவி பேராசிரியர் ப. சுதா, உளுந்து பயிரில் இளம் பருவத்தில் வறட்சியைத் தாங்குவதற்காக பரிந்துரை செய்யப்படும் விதை கடினப்படுத்துதல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.
ஏற்பாடுகளை தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆ. செந்தில்குமார், என். பிரபு, மு. கலைச்செல்வி, பி. ராஜேந்திரன், முனைவர் முத்துகிருஷ்ணன், பண்ணை மேலாளர் இ. வித்யா ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சி முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தைச் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.