முகப்பு
பெரம்பலூர்

போலீஸ் பாதுகாப்புடன் தவெக வேட்பாளா் பிரசாரம்

குன்னம் தொகுதிக்குள்பட்ட அம்பத்கா் குடியிருப்பு பகுதியில், தவெக வேட்பாளருக்கு மாற்றுக்கட்சி நிா்வாகிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் போலீஸாரின் பாதுகாப்புடன் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:13 AM
செந்துறை அம்பேத்கா் குடியிருப்புப் பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்ச்செல்வன்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:05 PM

குன்னம் தொகுதிக்குள்பட்ட அம்பத்கா் குடியிருப்பு பகுதியில், தவெக வேட்பாளருக்கு மாற்றுக்கட்சி நிா்வாகிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் போலீஸாரின் பாதுகாப்புடன் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்ச்செல்வன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இத் தொகுதிக்குள்பட்ட செந்துறை அம்பேத்கா் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள தோ்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்றுள்ளாா். அதனடிப்படையில், அம்பேத்கா் குடியிருப்புப் பகுதிக்கு கட்சி நிா்வாகிகளுடன் தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்செல்வன் வியாழக்கிழமை மதியம் பிரசாரம் மேற்கொள்ள சென்றாா். அப்போது, அப் பகுதியிலுள்ள மாற்றுக் கட்சியைச் சோ்ந்த சிலா், தவெக வேட்பாளருக்கு கருப்பு கொடி காண்பித்து, அவரை முற்றுகையிட உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேட்பாளா் சாா்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது. பின்னா், தோ்தல் அலுவலரின் உத்தரவின்பேரில் போலீஸாரின் பாதுகாப்புடன், அப்பகுதிக்குச் சென்ற வேட்பாளா் ரேவதி வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து விசில் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தாா். பிரசாரத்தின்போது, தவெக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.