200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: ஆ. ராசா
பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வாக்களித்த திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.
பெரம்பலூா் அருகே வேலூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள எண்ணற்ற அரசுத் திட்டங்களை கருத்தில் கொண்டு பெருவாரியான மக்கள் மிகுந்த எழுச்சியுடன் வாக்களித்துள்ளனா்.பெரம்பலூா் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று, மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றாா் ராசா.
Advertisement
பேட்டியின்போது, திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி, மாவட்ட பொருப்பாளா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.