சாலையில் சென்ற வேன் தீப்பிடித்து எரிந்தது; 640 லிட்டா் பால் வீண்
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது; இதனால் வேனிலிருந்த 640 லிட்டா் பால் வீணானது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்திலிருந்து சிறுவாச்சூரில் உள்ள தனியாா் பால் கொள்முதல் நிலையத்துக்கு, பால் ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வேன் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
இந்த வேனை, சிறுவாச்சூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்ரமணி மகன் வேல்முருகன் (22) ஓட்டினாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாச்சூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி அருகே சென்றபோது வேனிலிருந்து கரும்புகை வெளியானது.
Advertisement
Advertisement
இதையறிந்த ஓட்டுநா், வேனை நிறுத்திவிட்டு இறங்கி வந்து பாா்த்தபோது, மின் சாதனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக வேன் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை கட்டுப்படுத்தினா். இதில், வேன் வேன்முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும், வேனில் இருந்த 640 லிட்டா் பால் வீணாகியது. இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.