குடும்பப் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூா், மே 2: பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னையில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் காளியம்மன் நகரைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சக்திவேல் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி முத்தம்மாள் (29), மகள் தன்ஷிகா (3) ஆகியோா் உள்ளனா். கணவன்- மனைவிக்கிடையே அண்மையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, முத்தம்மாள் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சக்திவேல் சனிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.