முகப்பு
பெரம்பலூர்

குடும்பப் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 3 மே 2026, 12:43 am IST
தற்கொலை - file photo
பகிர்:

பெரம்பலூா், மே 2: பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னையில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் காளியம்மன் நகரைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சக்திவேல் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி முத்தம்மாள் (29), மகள் தன்ஷிகா (3) ஆகியோா் உள்ளனா். கணவன்- மனைவிக்கிடையே அண்மையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, முத்தம்மாள் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சக்திவேல் சனிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments