பேருந்து மோதி தொழிற்பயிற்சி மாணவர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் தொழிற்பயிற்சி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் தொழிற்பயிற்சி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், பல்லாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தமிழ்வாணன்(22). இவர், திருச்சியில் உள்ள பொக்லைன் இயக்குவதற்கான தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்றுவந்துள்ளார். இவருக்கு, அந்தப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கீழாத்தூரில் பொக்லைன் இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், திங்கள்கிழமை காலை கீழாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இவர், மேலாத்தூர் நீரேற்று நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநரான கீரனூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.மோகன்ராஜை(35) கைது செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.