முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கியில் 15 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

அறந்தாங்கியில் வாரச்சந்தை கடைகளில் அறந்தாங்கி சுகாதார அலுவலர் த.முத்துகணேஷ், நகர வடிவமைப்பு

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:25 am IST
பகிர்:

அறந்தாங்கியில் வாரச்சந்தை கடைகளில் அறந்தாங்கி சுகாதார அலுவலர் த.முத்துகணேஷ், நகர வடிவமைப்பு அலுவலர் அன்பழகன் உள்ளிட்ட 10 பேர் செவ்வாய்க்கிழமை 
திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 15 கிலோ நெகிழி பறிமுதல் செய்யப்பட்டது. 
அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள நெகிழி பைகள் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், கருவாடு வியாபாரிகள் நெகிழிப் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த 15 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை யாரும் பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடும் அபராதத் தொகை செலுத்த நேரிடும் என விளம்பரம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.