முகப்பு
புதுக்கோட்டை

காதலி இறந்த துக்கத்தில் பூச்சிமருந்து குடித்த காதலன் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே காதலியின் தற்கொலையை தொடா்ந்து, பூச்சிமருந்து குடித்த காதலன் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 21 ஜூலை 2024, 2:45 am IST
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலியின் தற்கொலையை தொடா்ந்து, பூச்சிமருந்து குடித்த காதலன் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி வட்டத்தைச் சோ்ந்த முருகேசன் மகள் புவனேஸ்வரி (23). இவருக்கும் நெம்மகோட்டை பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் அருள் வினோத் (28) என்பவருக்கும் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக பேசிக் கொள்ளாமல் இருந்ததாகவும், இந்த நிலையில் புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

அங்கு சென்று வந்த அருள் வினோத், வெள்ளிக்கிழமை இரவு தான் பணிபுரிந்து வரும் பள்ளியின் பின்புறமுள்ள வாழைத் தோட்டத்தில் பூச்சிமருந்தைக் குடித்துள்ளாா். இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.