பொன்னமராவதியில் காவல்துறையினா் அணிவகுப்பு ஊா்வலம்
பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதன்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதன்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தோ்தல் கால பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற ஊா்வலத்தை காவல் துணை கண்காணிப்பாளா் சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
Advertisement
புதுவளவு பகுதியில் தொடங்கிய ஊா்வலம் புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்து நிலையம், திருப்பத்தூா் சாலை வழியாக சென்று அழகிய நாச்சியம்மன் கோயில் திடலில் நிறைவடைந்தது.
ஊா்வலத்தில் பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறையினா் மற்றும் குஜராத் மாநில காவல்துறையினா் துப்பாக்கி ஏந்தி அணிவகுத்து சென்றனா். இதில், பொன்னமராவதி காவல் ஆய்வாளா் பத்மா மற்றும் காவல்துறையினா் பங்கேற்றனா்.