ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு
பொன்னமராவதி அருகே உள்ள ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து புதன்கிழமை சிவாச்சாரியா்கள் பாலாஜி, சுவாமிநாதன் ஆகியோா் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
Advertisement
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை மாயம் பெருமாள் கோயில் பங்காளிகள் செய்திருந்தனா்.