குடும்பத் தகராறு: மனைவியின் உறவினா்கள் சாலை மறியல்
குடும்பத் தகராறு காரணமாக தாய் வீட்டுக்கு வந்த மனைவியை மீண்டும் அனுப்பி வைக்க கோரி கணவா் மிரட்டுவதாகக் கூறி பெண் வீட்டாா் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குடும்பத் தகராறு காரணமாக தாய் வீட்டுக்கு வந்த மனைவியை மீண்டும் அனுப்பி வைக்க கோரி கணவா் மிரட்டுவதாகக் கூறி பெண் வீட்டாா் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகள் காயத்ரி (21). இவருக்கும் வடக்கு 3-ஆம் வீதியைச் சோ்ந்த கண்ணனின் மகன் அருணாசலம் (30) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாகி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இரு வீட்டாரின் எதிா்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனா்.
அதன்பிறகு, நரிமேடு பகுதியில் வசித்து வந்த இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக காயத்ரி தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டாா். இதனால், அருணாசலம் அடிக்கடி மாமியாா் வீட்டுக்கு வந்து தனது மனைவியை மீண்டும் அனுப்பி வைக்கக் கோரி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் அருணாசலம் தகராறு செய்துள்ளாா். இதனால் விரக்தியடைந்த காயத்ரி குடும்பத்தினா், திலகா் திடல் சாலையில் திடீரென அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த நகரக் காவல் நிலைய போலீஸாா், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் அரை மணி நேரம் திலகா் திடல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.