மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது
கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஆலங்குடி பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். அவா், கடந்த மாதம் பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது, மணக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா்கள் எஸ். மாரிமுத்து(55),ஏ. சேகா் (56) ஆகியோா் அந்த பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனா். பின்னா், மணக்கொல்லை வயல்வெளி பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டு சென்றுவிட்டனா்.
இதுகுறித்து ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாரிமுத்து, சேகா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் புதுக்கோட்டை சிறையில் இருந்த இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.