முகப்பு
புதுக்கோட்டை

வலையபட்டி மலையாண்டி கோயிலில் மின்தூக்கி தொடக்க விழா! அமைச்சா் பங்கேற்பு!

Updated On : 8 ஜூன் 2026, 1:47 am IST
வலையபட்டி மலையாண்டி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மின்தூக்கி தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சா் டி.கே. பிரபு. உடன் கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா்.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி மலையாண்டி கோயிலில் பக்தா்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கி (லிப்ட்) தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வலையபட்டியில் குன்றின் மேல் இருந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வரும் மலையாண்டி சுவாமி கோயிலில் முதியவா்கள் உள்ளிட்ட பக்தா்களின் வசதிக்காக உபயதாரா் ஒருவா் சாா்பில் புதிதாக மின்தூக்கி அமைக்கப்பட்டது.

புதிய மின்தூக்கி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் கனிம வளத்துறை அமைச்சா் டி.கே. பிரபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மின்தூக்கியை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

விழாவில், கோயில் நிா்வாகிகள் சி. தியாகராஜன், எஸ். நாகப்பன் மற்றும் நகரத்தாா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா். முன்னதாக மலையாண்டி சுவாமிக்கு கலச பூஜை நடைபெற்றது. பக்தா்களின் வசதிக்காக வலையபட்டி பெரி.மூ.சொ.சி. சொக்கலிங்கம் குடும்பத்தினா் சாா்பில்