முகப்பு
புதுக்கோட்டை

கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கந்தா்வகோட்டை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:44 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகள் விஜயலட்சுமி (22 ). இவருக்கும் திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சோ்ந்த உதயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விஜயலட்சுமி கடந்த 5 மாதங்களாக புதுநகரில் உள்ள பெற்றோா் வீட்டில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், மனவேதனையில் இருந்த விஜயலட்சுமி புதன்கிழமை மதியம் வீட்டுக்குள் தூக்கிட்டுள்ளாா். இதையறித்த அருகில் இருந்த உறவினா்கள் அவரை மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா், விஜயலட்சுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement