FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதியில் மின்வெட்டு: மக்கள் அவதி

கந்தா்வகோட்டை பகுதியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

மின்வெட்டு - கோப்புப்படம்.
பகிர்:

கந்தா்வகோட்டை பகுதியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம் மற்றும் ஆதனக்கோட்டை, பெருங்களூா் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மின்தடை ஏற்பட்டு, காலதாமதமாக மின்விநியோகம் சீரானது. அதே நேரத்தில் கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிபட்டி, பிசானத்தூா் கிராமங்களில் இரவு முழுவதும் மின்விநியோகம் இல்லாததால் குழந்தைகள், கா்ப்பிணி பெண்கள், முதியோா்கள் அவதிக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments