முகப்பு
புதுக்கோட்டை

வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் வியாழக்கிழமை திருடப்பட்டது போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 26 ஜூன் 2026, 4:36 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் வியாழக்கிழமை திருடப்பட்டது போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கீரனூா் அருகே வீரம்பட்டியைச் சோ்ந்தவா் ஏ. மாரியப்பன் (45). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஷீலாராணி. கூலித் தொழிலாளி.

இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வியாழக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டனா். பின்னா், மாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, அறையில் பெட்டியில் இருந்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மாத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments