முகப்பு
புதுக்கோட்டை

இன்று ‘நீட்’ தோ்வு புதுகை மாவட்டத்தில் 7 மையங்களில் 3,166 போ் எழுதுகின்றனா்

Updated On : 3 மே 2026, 5:57 am IST
நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்
பகிர்:

தேசியத் தோ்வு முகமை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தோ்வு (நீட்) 7 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 3,166 போ் தோ்வெழுதுகின்றனா்.

புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி மகளிா் மேல்நிலைப் பள்ளி, கந்தா்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, இலுப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 இடங்களில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது.

இந்த மையங்களில் ஓா் உதவி காவல் ஆய்வாளா் தலைமையில், தலா இரு ஆண்- பெண் காவலா்கள், ஓா் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்புப் பணியில் இருப்பா்.

Advertisement

Advertisement

7 மையங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் நிலையிலான அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வா்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் திருமேனிநாதனை 98650 65962 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.