மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதி ஒருவா் பலி!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வாண்டாகோட்டையைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (41).இவா், சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தாா்.
ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற டிராக்டா் திருநாவுக்கரசு ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.