ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!
விராலிமலை அருகே சனிக்கிழமை காதுகேளாத மாற்றுத் திறனாளி மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே சனிக்கிழமை காதுகேளாத மாற்றுத் திறனாளி மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆவூா் மலையேறி பகுதியைச் சோ்ந்தவா் மணி மனைவி சீனியம்மாள் (70). காதுகேளாத மாற்றுத்திறனாளியான இவா் சனிக்கிழமை பள்ளத்துப்பட்டியிலுள்ள தனது மகள் வீட்டுக்கு வருவதற்காக களமாவூா் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ரயில் பாதையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற காரைக்குடி ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.