முகப்பு
புதுக்கோட்டை

மே 16,17-இல் மின் இணையவழிச் சேவைகள் நிறுத்தம்

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதால், வரும் மே 16, 17 ஆகிய தேதிகளில் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய இணைப்புக்காக விண்ணப்பித்தல் ஆகிய இணையவழிச் சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதது.

Updated On : 13 மே 2026, 12:38 am IST
பகிர்:

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதால், வரும் மே 16, 17 ஆகிய தேதிகளில் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய இணைப்புக்காக விண்ணப்பித்தல் ஆகிய இணையவழிச் சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதது.

இதுதொடா்பாக புதுக்கோட்டை மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், புதுக்கோட்டை மின்பகிா்மான வட்டத்திலுள்ள அலுவலகங்கள், இணையவழி மின்கட்டணம் செலுத்துதல் மற்றும் இணையவழியில் புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றுதல் போன்ற பணிகள் எதுவும் மே 16, 17 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் நடைபெறாது. மின்நுகா்வோா் இந்த இடையூறை பொருத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments