கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்
தஞ்சாவூர் கோட் டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை
தஞ்சாவூர் கோட் டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஐம்பது சதவீத பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் விதமாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின் வசதி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் டிச. 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சங்கத்தின் சார்பில் தொடர்ந்து நாள்தோறும் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மணிமண்டபம் பகுதியில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. முருகேசன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.