புகையிலை விற்பனை: 5 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்ததாக 5 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்ததாக 5 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீஸார் சனிக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாக பாபநாசம் சீனிவாசன் (55), தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பாலாஜி (35), ஒரத்தநாடு புகாரி (48), பந்தநல்லூர் சீனிவாசன் (31), பாரதி (55) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.