மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இளைஞர் சாவு
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கார் டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கார் டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவையாறு அருகேயுள்ள ஆச்சனூர் தொட்டித் தெருவைச் சேர்ந்தவர் சங்கிலி மகன் பூபதி (28). இவர் மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை காலை திருவையாறு கடை வீதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஆச்சனூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சடையான்தோப்பு அருகே சென்றபோது, திருக்காட்டுப்பள்ளியிலிருந்து திருவையாறு நோக்கி வந்து கொண்டிருந்த கார் டயர் வெடித்து பூபதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பூபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவையாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.